வெளிநாடு செல்பவர்கள் கோவின் இணையதளத்தில் பாஸ்போர்ட்டை இணைத்து தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வெளிநாடு செல்பவர்கள் தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசியை செலுத்துவதில் வெளிநாடு செல்பவர்கள் முக்கியத்துவம் அளித்து வருகின்றன. அந்த வகையில் 2 டோஸ் தடுப்பூசியும் செலுத்திய பிறகு வேலைவாய்ப்பு மற்றும் கல்வி அடிப்படையில் வெளிநாடு செல்பவர்களுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகள் மத்திய அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக, வெளிநாடு செல்பவர்கள் மட்டும் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி 28 நாட்களுக்குப் பிறகு இரண்டாவது தவணை கோவிஷீல்டு தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இரண்டு தவணைத் தடுப்பூசியும் செலுத்தி கொள்ளும் நபர்கள் கோவின் செயலியில் தங்களுடைய பாஸ்போர்ட்டை பதிவேற்றம் செய்வதன் மூலமாக கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.