புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் 2 நடைமேடைகளில் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர சரக்கு ரெயில்கள் நிறுத்த தனியாக தண்டவாள பாதை உள்ளது. தற்போது சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிற நிலையில் பயணிகள் ரெயில் நிலையத்திற்கு அதிக அளவில் வந்து செல்கின்றனர். திருச்சி- காரைக்குடி இடையே ரெயில் பாதை மின்மயமாக்கல் பணிகளின் ஒரு பகுதியாக புதுக்கோட்டை ரெயில் நிலையத்திலும் மின்மயமாக்கும் பணிகள் நடைபெறுகிறது. இந்தநிலையில் ரெயில் தண்டவாளங்களில் பராமரிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தண்டவாளத்தில் ஸீலிப்பர் கட்டைகள், ஜல்லிக் கற்களை சரி செய்தல், மேலும் தண்டவாளத்தில் பாயிண்ட் பகுதிகளில் பராமரித்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெறுகிறது.
எந்திரம்
இந்த தண்டவாள பராமரிப்பு பணிகள் நவீன எந்திரம் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. ரெயில்வே ஊழியர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்த இந்த பணிகள் தற்போது நவீன தொழில்நுட்ப வசதியுடன் எந்திரத்தால் பராமரிக்கப்படுகின்றன. ரெயில் தண்டவாளத்தின் அளவை சீராக வைத்து சரி செய்கிறது.
இந்த பணிகள் புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் இரு மார்க்க தண்டவாள பாதையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரெயில் போக்குவரத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக இந்த பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.