பிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகள்: தமிழக அரசு வெளியீடு





 
ஜூன் 3வது வாரத்தில் இருந்து வகுப்புகளை தொடங்கலாம் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், பிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. 

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், 

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பாடப்பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களைக்காட்டிலும் 10 சதவிகிதம் முதல் 15 சதவிகிதம் வரை கூடுதலாக சேர்க்கை நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பாடப்பிரிவுகளுக்கு அதிக விண்ணப்பங்கள் வந்தால் பள்ளி அளவில் தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கையை நடத்தலாம். அதிக விண்ணப்பங்களைப் பெறும் பாடப்பிரிவிற்கு தொடர்புடைய பாடங்களில் இருந்து 50 வினாக்களில் தேர்வுகளை நடத்தலாம்.

 அதன்மூலம் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளலாம். பிளஸ் 1 வகுப்புகளுக்கு ஜூன் 3ஆம் வாரத்தில் தொலைதொடர்பு முறையில் வகுப்புகளைத் தொடங்க வேண்டும்.

 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சிகள் மூலமாகவும், தொலைதொடர்பு முறையிலும் வகுப்புகளை நடத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments