குடும்ப வறுமையைப் போக்கவீட்டு வேலை செய்வதற்காக பாரதி தனது 9-மாத குழந்தை தேவேஷ் உடன் கடந்த மார்ச் மாதம் துபாய்க்கு சென்றார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சித்தேரி தெருவைச் சேர்ந்த வேலவன் மனைவி பாரதி (38). இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள். மூத்த மகன் சிறுநீரக கோளாறால் இறந்து விட்டார். குடும்ப வறுமையைப் போக்கவீட்டு வேலை செய்வதற்காக பாரதி தனது 9-மாத குழந்தை தேவேஷ் உடன் கடந்த மார்ச் மாதம் துபாய்க்கு சென்றார்.
துபாயில் கொரானா தொற்று காரணமாக கடந்த 29ம் தேதி பாரதி இறந்து விட்டார். அவரின் உடல் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது.
தாய் இறந்த நிலையில் குழந்தை மட்டும் தனியே இருக்கும் தகவல் அறிந்த துபாய் திமுக அமைப்பாளர் எஸ்.எஸ்.முகமது மீரான் இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து முதலமைச்சர் உதவியுடன் துபாயிலிருந்து குழந்தையை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில் திருவாரூரை சேர்ந்த சதீஷ்குமார் துபாயில் இருந்து ஊர் திரும்புவதை அறிந்து இண்டிகோ விமானத்தில் அவருடன் 11-மாத கை குழந்தை தேவேஷை திருச்சிக்கு அனுப்பி வைத்தனர். அவரும் குழந்தை தேவேஷை பாதுகாப்பாக அழைத்து வந்து, குழந்தையின் தந்தை வேலவனிடம் திருச்சி விமான நிலையத்திலேயே ஒப்படைத்தார். கொரோனாவால் தாயை இழந்த குழந்தை தந்தை அண்ணனுடன் சேர்ந்த நிகழ்வு பலரையும் நெகிழச் செய்தது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.