கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு பயணம் செய்ய தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடப்படுகிறது. வெளிநாடு செல்பவர்களுக்கு ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி போடப்படுகிறது.
‘கோவிஷீல்டு’ தடுப்பூசி முதல் தவணைக்கும், 2-வது தவணைக்கும் இடைவெளி 4 வாரத்தில் இருந்து 12 வாரங்களாக (84 நாட்கள்) அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், வெளிநாடு செல்பவர்கள் 2-வது தவணை தடுப்பூசிக்காக நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.
இந்நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசியின் 2-வது தவணையை 4 வாரத்தில் போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறும்போது, “கல்வி, வேலை, ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பவர்கள், ஒலிம்பிக் போட்டியை பார்வையிட வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் கோவிஷீல்டு தடுப்பூசி 2-வது தவணையை 28 நாட்களில் போட்டுக் கொள்ளலாம்.
இவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக சென்னையில் 19 மையங்கள் உட்பட தமிழகம் முழுவதும் 75 மையங்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு 84 நாட்கள் இடைவெளியில் தான் கோவிஷீல்டு 2-வது தவணை தடுப்பூசி போடப்படும்” என்றார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.