அறந்தாங்கியில் மனைவியின் வங்கிக்கணக்கில் ரூ.60 ஆயிரம் கள்ள நோட்டுகளை டெபாசிட் செய்த கணவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி ரேவதி. இவர் அந்த பகுதியில் உள்ள பேங்க் ஆப் பரோடா வங்கியில் கணக்கு வைத்துள்ளார். அந்த வங்கியின் சார்பில் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்வதற்காக எந்திரம் வைக்கப்பட்டுள்ளது. அதில், வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக்கணக்கில் பணத்தை டெபாசிட் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில், எந்திரத்தில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தை வங்கி அதிகாரிகள் எடுத்து சரிபார்த்தனர். அப்போது டெபாசிட் செய்யப்பட்ட பணத்தில் ரூ.60 ஆயிரம் (2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 30) கள்ளநோட்டுகளாக இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர், வங்கி அதிகாரிகள் எந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, 2 பேர் ரூ.60 ஆயிரத்தை டெபாசிட் செய்தது தெரிய வந்தது.
இதுகுறித்து வங்கி மேலாளர் ராதாகிருஷ்ணன் புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார்.
அந்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது வங்கியில் உள்ள எந்திரத்தில் சரவணன்(வயது 38) மற்றும் அவரது நண்பர் ரவிச்சந்திரன்(41) ஆகியோர் அந்த பணத்தை ரேவதியின் வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்தது தெரிய வந்தது.
அதன்பேரில், அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து புதுக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கள்ளநோட்டுக்கள் அவர்களுக்கு எப்படி கிடைத்தது?, இதில், யார்-யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளநோட்டுகள் புழக்கத்தால் அறந்தாங்கியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.