குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளில் கூடுதல் அரிசியை இந்த மாதம் முழுவதும் பெறலாம்: புதுகை கலெக்டர் தகவல்!



கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு தற்போது வருகிற 28-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கூடுதல் உணவு தேவைக்காக பொது வினியோக திட்ட அரிசி வழங்கும் நோக்கத்தில், மத்திய அரசின் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013-ன்படி பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் அந்தியோதயா அன்னயோஜனா மற்றும் முன்னுரிமை, முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகளில் உள்ள அனைத்து பயனாளிகளுக்கும் பயனாளி ஒருவருக்கு 5 கிலோ வீதம் மே மற்றும் ஜூன் மாத காலத்திற்கு கூடுதல் அரிசி விலையில்லாமல் வழங்க அரசால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி மே மாதத்திற்கு கூடுதலாக வழங்கப்பட வேண்டிய அரிசியினை ஜூலை மாதத்திலும், ஜூன் மாதத்திற்கு உரிய கூடுதலான அரிசியினை இந்த மாதம் (ஜூன்) முழுவதும் அந்தந்த நியாயவிலைக் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம். 

மேற்கண்ட குடும்ப அட்டைதாரர்கள் இந்த மாதம் அத்தியாவசிய பொருட்கள் பெறுவதற்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ள நாட்களில் அத்தியாவசிய, சிறப்பு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின்கீழ் வழங்கப்படும் கூடுதலான அரிசியினை பெற்றுக்கொள்ளலாம். 

இந்த தகவலை கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments