வாகனங்களில் மளிகை பொருட்கள் விற்க உள்ளாட்சி அமைப்பினரிடம் அனுமதி பெறலாம் என்று கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் நோய் தொற்றுப் பரவலை தடுப்பதற்காக மத்திய அரசு வழிகாட்டுதலின்படி தமிழ்நாட்டில் கடந்த 24-ந் தேதி முதல் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த முழு ஊரடங்கு வருகிற 7-ந் தேதி காலை 6 மணி வரை அமலில் இருக்கும். பொது மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் நடமாடும் காய்கறிகள், பழங்கள் விற்பனை தொடர்புடைய துறையினர் மூலம் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
அதே போன்று மளிகைப் பொருட்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகளால் வாகனங்கள் அல்லது தள்ளுவண்டி மூலமாக உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன், குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று விற்பனை செய்யவும், ஆன்-லைன் மற்றும் தொலைபேசி வாயிலாக வாடிக்கையாளர்கள் கோரும் பொருட்களை அவர்களது வீடுகளுக்கே சென்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நேரில் வழங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மளிகைப்பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள் மற்றும் நிறுவனங்கள் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகராட்சி ஆணையரிடமும், கிராமப்புற மற்றும் பேரூராட்சி பகுதிகளில் தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலர், பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோரை தொடர்பு கொண்டு அனுமதிச் சீட்டு பெற்றுக்கொள்ளலாம். இந்த தகவலை கலெக்டர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.