புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளின் உறவினர்கள் திடீர் போராட்டம்



புதுக்கோட்டையில் கொரோனா நோயாளிகளின் உறவினர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை மையம் தனியாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் 600-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் நோயாளிகளின் உறவினர்கள் நேற்று காலை கொரோனா வார்டு முன்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை எனவும், உணவுகள் தரமானதாக வினியோகிக்கப்படவில்லை எனவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் வருவாய்த்துறை அதிகாரிகள், கணேஷ்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜாபர் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மருத்துவமனை அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். அதன்பின் அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் நோயாளிகளின் உதவியாளர்களாக இருந்து வருகின்றனர். கொரோனா பரவல் அதிகரித்து வருகிற நிலையில் மருத்துவமனை வளாகத்தில் அவர்களது போராட்டம் தொற்றை அதிகரிக்க கூடிய வகையில் இருந்ததால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments