புதுக்கோட்டை மாவட்டத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் அடையாள அட்டை பெற்று, அதேசமயம் குடும்ப அட்டை பெறாதவர்களுக்கும் தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதி உதவித்தொகை ரூ.2 ஆயிரம் வழங்கப்படவுள்ளது.
மேலும் இதுவரை அடையாள அட்டை பெறாத மூன்றாம் பாலினத்தவர்களிடமிருந்து அடையாள அட்டை பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. அடையாள அட்டை பெறுவதற்கு ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம், பள்ளி மாற்றுச்சான்றிதழ் ஆகிய சான்றுகளுடன் விண்ணப்பங்களை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தில் வருகிற 30-ந் தேதி மாலை 5 மணிக்குள் வழங்க வேண்டும். மேலும் இதுகுறித்த விவரங்களை மாவட்ட சமூகநல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.