கட்டுமாவடி, மணமேல்குடியில் பெரிய மீன் மார்க்கெட்டுகள் உள்ளன. இந்த மீன் மார்க்கெட்டிற்கு விசைப்படகு, நாட்டுப்படகில் பிடிக்கப்படும் மீன்கள், இறால்கள் விற்பனைக்கு வருகிறது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. மேலும் நாட்டுப்படகில் பிடிக்கப்படும் மீன்கள் விற்பனைக்கு வந்தது.
இந்நிலையில் கொரோனா 2-வது அலை காரணமாக ஊரடங்கு போடப்பட்டதால் மீன் மார்க்கெட்டுகள் மூடப்பட்டன. இந்நிலையில் அரசு மீன் மார்க்கெட்டுகளை திறக்க அனுமதி அளித்தது. ஆனால் சரிவர மீன்கள் வரத்து இல்லாததால் மீன் மார்க்கெட் திறக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மணமேல்குடி, கட்டுமாவடி மீன் மார்க்கெட்டுகள் திறக்கப்பட்டு மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மீன் மார்க்கெட் திறக்கப்பட்டாலும் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லாததால் மீன் விலை சற்று அதிகமாகவே உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.