மணமேல்குடி அடுத்த கட்டுமாவடி பகுதியை சேர்ந்த கருப்பையா-சரண்யா தம்பதியின் மகள் பார்வதி (வயது 9). இந்தநிலையில் சரண்யாவுக்கு திருவப்பவாடி பகுதியை சேர்ந்த திருநங்கை காவியா (28) என்பவர் அறிமுகம் ஆனார்.
இதைத்தொடர்ந்து இருவருக்கும் நட்பு ஏற்பட்டது. சம்பவத்தன்று சரண்யாவின் வீட்டிற்கு வந்த காவியா குழந்தையை கட்டுமாவடி கடைவீதிக்கு தூக்கி செல்வதாக கூறி அழைத்து சென்றுள்ளார். அதன்பின் நீண்டநேரமாகியும் காவியா வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சரண்யா கணவரை அழைத்து சென்று தேடினார். ஆனால் கிடைக்கவில்லை. காவியா குழந்தையை கடத்தி சென்றது தெரியவந்தது.
இது குறித்து சரண்யா மணமேல்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சாமுவேல் ஞானம் தலைமையில் போலீசார் தனிப்படை அமைத்து குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் காரைக்குடி பகுதியில் பதுங்கியிருந்த காவியாவை கைது செய்து குழந்தையை மீட்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.