பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மக்களுக்கு அறந்தாங்கி அம்மா உணவகத்தில் விலையில்லா உணவு வழங்கும் வகையில், தனது முதல் மாத ஊதியத்திலிருந்து ரூ. 1 லட்சத்துக்கான காசோலையை வழங்கியுள்ளாா் சட்டப்பேரவை உறுப்பினா் தி. ராமச்சந்திரன்.
அந்தாங்கி நகராட்சி மூலம் பேருந்து நிலையம் அருகே அம்மா உணவகம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு தினமும் காலை மற்றும் மதியம் தலா 100 பேருக்கு குறைந்த விலையில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. பொது முடக்கக் காலத்தில் ஆதரவற்றோா் மற்றும் ஏழை, எளியோருக்கு அம்மா உணவகம் பெரும் வரமாக மாறிவிட்டது.
இந்த நிலையில் அறந்தாங்கி தொகுதி காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினா் தி. ராமச்சந்திரன், தனது முதல் மாத ஊதியத்திலிருந்து ரூ. 1 லட்சத்துக்கான காசோலையை நகராட்சி ஆணையரிடம் வழங்கியுள்ளாா்.
இந்தத் தொகையிலிருந்து திங்கள்கிழமை (ஜூன் 7) முதல் ஒரு மாதக் காலத்துக்கு அனைத்துப் பொதுமக்களுக்கும் விலையின்றி உணவு வழங்கப்படவுள்ளது.
இதே அறந்தாங்கி அம்மா உணவகத்துக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் நவாஸ்கனி தனது சொந்த நிதியிலிருந்து ரூ. 50 ஆயிரம் வழங்கி, ஒரு வாரக் காலத்துக்கு விலையின்றி உணவு வழங்கச் செய்தாா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.