சி.ஏ.ஏ. சட்டத்தை அமல்படுத்தும் மத்திய அரசை கண்டித்து கோபாலப்பட்டிணத்தில் தமுமுகவினர் இனையவழி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டானிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மீமிசல் அருகேயுள்ள கோபாலப்பட்டிணத்தில் ஜூன் 02 இன்று புதன்கிழமை CAA-NRC-NPR-ரை ரத்து செய்ய கோரியும், குடியுரிமை சட்டத்தின் கொடிய சதிகளை கொரோனா காலகட்டத்திலும் நிறைவேற்ற முயலும் பாஜக அரசை கண்டித்தும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக பழைய காலனியில் காலை 10.30 மணி முதல் 10.45 மணி வரை கண்டண போராட்டம் நடைபெற்றது.
சமூக இடைவெளியுடன் முக கவசம் அனிந்தும் கோபாலப்பட்டிணம் கிளை தலைவர் முகமது மசூது அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. இதில் மாவட்ட நிர்வாகிகள் அசாருதீன், முபாரக் ஒன்றிய நிர்வாகிகள் அசாருதீன், அபுதாஹிர், கிளை நிர்வாகிகள் ஹிதயாத்துல்லாஹ், முஸ்தாக், ஆசிக் உட்பட பல நிர்வாகிகள் மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள் கலந்துக் கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர்.
NO CAA - NO NRC - NO NPR
அரசியலமைப்புக்கு எதிரான CAA சட்டத்தை அமல்படுத்தாதே, குடியுரிமை விடயத்தில் பாகுபாடு பார்க்காதே, கொடும் தொற்று காலத்தில் கொடிய CAA சட்டம் தேவையா? மக்களை திசை திருப்ப இப்படி ஒரு வேலையா? அனுமதிக்கமாட்டோம்.. அனுமதிக்கமாட்டோம் CAA - NRC - NPR சட்டத்தை அனுமதிக்கமாட்டோம்.
தகவல்:
தமுமுக ஊடக அணி,
கோபாலப்பட்டினம் கிளை
புதுக்கோட்டை மாவட்டம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.