முற்பகல், பிற்பகல் என இரண்டு நேரங்களில் நியாய விலைக்கடைகள் செயல்படும்.
டோக்கன்களை அட்டை தாரர்களின் வீடுகளுக்கு பிற்பகல் நேரத்தில் சென்று விநியோகிக்க வேண்டும்.
முற்பகலில் கடைகளில் வழக்கம் போல அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப் பட வேண்டும்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவானது வருகிற 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காய்கறி, மளிகை, பலசரக்கு கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் ரேஷன் கடைகள் செயல்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 9 மணி முதல் பகல் 12.30 மணி ப்வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் ரேஷன் கடைகள் செயல்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை மேற்கண்ட நேரத்திலேயே ரேஷன் கடைகள் செயல்படும்.
கொரோனா நிவாரண நிதி இரண்டாவது தவணை, 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வருகிற 15ஆம் தேதி முதல் அரசி அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படவுள்ளது. இதற்கான டோக்கன்களை வருகிற 11ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை கார்டுதாரர்களின் வீடுகளுக்கே சென்று கடைப் பணியாளர்கள் விநியோகிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேற்கண்ட நாட்களில் இந்த டோக்கன்களை அட்டை தாரர்களின் வீடுகளுக்கு பிற்பகல் நேரத்தில் சென்று விநியோகிக்க வேண்டும் எனவும், முற்பகலில் கடைகளில் வழக்கம் போல அத்தியாவசிய பொருட்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப் பட வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.