தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு நாளையுடன் (திங்கட்கிழமை) முடிவடையிருந்த நிலையில் வருகிற 5-ந் தேதி வரை கூடுதல் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் பஸ்களை இயக்க புதுக்கோட்டை உள்பட 23 மாவட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை காலை முதல் பஸ்கள் 50 சதவீத பயணிகளுடன் இயக்கப்பட உள்ளது. இதையொட்டி 139 நகர பஸ்களும், 245 புறநகர் பஸ்களும் தயார் நிலையில் பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பஸ்களில் நேற்று கிருமி நாசினி மற்றும் தூய்மை பணி நடைபெற்றது.
புதுக்கோட்டை நகராட்சி நிர்வாக தூய்மை பணி ஊழியர்கள் பஸ்களில் உள்பகுதி மற்றும் வெளிப்பகுதியில் கிருமி நாசினி தெளித்தனர். இதேபோல பஸ்களில் டயர்களில் காற்று சரிபார்த்தல், உதிரிபாகங்கள் சரிபார்த்தல் உள்பட பராமரிப்பு பணிகள் நடைபெற்றன.
பஸ்களை இயக்குவதற்கு டிரைவர், கண்டக்டர்கள் பணிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் நாளை முதல் இயக்கப்பட உள்ளது. புதிய பஸ் நிலையத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள காய்கறி மார்க்கெட் கடைகள் அகற்றப்படும். மார்க்கெட்டிலே மீண்டும் வியாபாரிகள் வியாபாரம் செய்வார்கள்.
தஞ்சாவூர், கரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்க தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்படாது என அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் பயணிகள் வசதிக்காக மாவட்ட எல்லைப்பகுதி வரை பஸ்கள் இயக்கப்படலாம் என்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.