புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் 1430 ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாய கணக்குகள், வருவாய் தீர்வாயம் குறித்த ஜமாபந்தி நிகழ்வு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் (22.06.2021) அன்று நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பின் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது.
புதுக்கோட்டை மாவட்டத்தில், உள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும் கிராம நிர்வாக அலுவலர்களால் பராமரிக்கப்பட்டு வரும் வருவாய் கிராமக்கணக்குகளை ஒவ்வொரு வருடமும் அந்தந்த பசலியின் (வருடம்) இறுதி மாதத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட வருவாய் அலுவலர், மற்றும் துணை ஆட்சியர்களால் தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. அதேபோன்று, நடப்பு பசலி (1430) வருடத்திற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று முதல் புதுநகர் உள்வட்ட கிராம கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் இன்றையதினம் கந்தர்வக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்வு பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. இதில் மஞ்சப்பேட்டை, புதுநகர், அரியாணிப்பட்டி, புனக்குளம், பழைய கந்தர்வக்கோட்டை, பிசானத்தூர், வீரடிப்பட்டி, முதுகுளம், குளத்தூர், பெரியகோட்டை, புதுப்பட்டி, நடுப்பட்டி, நம்புரான்பட்டி, சேவியர்குடிக்காடு ஆகிய பகுதிகளுக்கான ஜமாபந்தி நடைபெற்றது.
மேலும் 23.06.2021 அன்று கல்லாக்கோட்டை உள்வட்டத்திற்கும், 24.06.2021 அன்று கந்தர்வக்கோட்டை உள்வட்டத்திற்கும் வருவாய்த்தீர்வாயம் நடைபெற உள்ளது. இந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் பொது மக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் பெறப்படும் கோரிக்கை மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது வட்டாட்சியர் புவிஅரசன், மாவட்ட ஆட்சியரக நிர்வாக மேலாளர் செந்தமிழ்குமார் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.