புதுக்கோட்டையில் மக்கள் நீதிமன்றத்தில் 128 வழக்குகள் சமரச தீர்வு!



மக்கள் நீதிமன்றத்தில் 128 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது. இதில் உரியவர்களுக்கு ரூ.1 கோடியே 83 லட்சத்து 74 ஆயிரம் வழங்கப்பட்டன.

புதுக்கோட்டையில் மக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது. மாவட்ட முதன்மை நீதிபதி அப்துல் காதர் தலைமை தாங்கினார். புதுக்கோட்டையில் கூடுதல் மாவட்ட நீதிபதி குருமூர்த்தி, தலைமை குற்றவியல் நீதித்துறை நீதிபதி சாந்தி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ராஜா, குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-1 அறிவு ஆகிய நீதிபதிகள் கொண்ட 2 அமர்வுகள் மற்றும் தாலுகா நீதிமன்ற நான்கு அமர்வுகள் என மொத்தம் 6 அமர்வுகளில் நடைபெற்றது.

இதில் நிலுவையில் உள்ள உரிமையியல், குற்றவியல், வாகன விபத்து இழப்பீடு, காசோலை மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குள்எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் மொத்தம் 128 வழக்குகள் சமரச தீர்வு காணப்பட்டன. மேலும் உரியவர்களுக்கு ரூ.1 கோடியே 83 லட்சத்து74 ஆயிரத்து905 இழப்பீடு வழங்கப்பட்டன.

இதேபோல் ஆலங்குடியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியும், ஆலங்குடி வட்ட சட்ட பணிகள் குழு தலைவருமான நல்லகண்ணு தலைமையில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments