புதுக்கோட்டையில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட 21 வயது வாலிபரை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் குணப்படுத்தினர்.
புதுக்கோட்டை கீழ 3-ம் வீதியை சேர்ந்தவர் நவீன்ராஜ் (வயது21). இவருக்கு கடந்த மாதம் 24-ந் தேதி தலைசுற்றியது, அதைத்தொடர்ந்து இடது கை மற்றும் கால் செயலிழந்திருப்பதாக கூறி புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை மருத்துவர்கள் முழு உடல் பரிசோதனை செய்ததில் அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. பின் அவருக்கு சி.டி. ஸ்கேன் செய்து பார்த்தில் மூளைக்கு செல்லும் ரத்த குழாயில் ரத்தம் உறைந்து அடைப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவருக்கு நோய் தாக்கம் ஏற்பட்டு 4 மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு வந்ததால் மூளையில் ரத்த உறைவு அடைப்பை நீக்கும் சிறப்பு மருந்து செலுத்தப்பட்டது.
இதனைத்தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்குள் நோயாளியின் கை கால் செயலிழப்பு முழுமையாக குணமடைந்து, யாருடைய உதவியும் இல்லாமல் தானாக எழுந்து நடக்கும் அளவிற்கு குணமடைந்தார். சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்களை மருத்துக்கல்லூரி முதல்வர் பாராட்டினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.