புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள குமரப்பன்வயல் கிராமத்தில் கடற்கரை ஓரத்தில் ஒரு பெரிய திமிங்கலம் இறந்த நிலையில் கரை ஒதுங்கி கிடந்தது. இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள் கடலோர காவல் குழுமத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் கடலோர காவல் படை இன்ஸ்பெக்டர் முத்துக்கண்ணு, சப்-இன்ஸ்பெக்டர் ராமராஜன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறை அதிகாரி அன்புமணி சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார்.
கடற்கரையில் இறந்து கிடந்த திமிங்கலம் கோகியா வகையை சேர்ந்தது என கண்டறியப்பட்டது. பின்னர் அதனை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டார்.
அதனடிப்படையில் அங்கு வந்த கால்நடை மருத்துவர் பாலகிருஷ்ணன் இறந்த திமிங்கலத்தை பிரேத பரிசோதனை செய்தார். அப்போது திமிங்கலத்தின் வயிற்றில் இறந்தநிலையில் 6 மாத குட்டி ஒன்று இருந்தது, அதனை தனியாக எடுத்தனர். பின்னர் இறந்த திமிங்கலத்தை அங்கேயே அடக்கம் செய்தனர்.
வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட குட்டியை ஆராய்ச்சிக்காக தொண்டி வன உயிரியல் காப்பக அதிகாரி மதுபாலனிடம் ஒப்படைக்கப்பட்டது. இறந்த திமிங்கலம் 6 அடி நீளமும், 3 அடி அகலமும் சுமார் 200 கிலோ எடை கொண்டதாக இருந்தது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.