குமரப்பன்வயல் கிராமத்தில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலம்!



குமரப்பன்வயல் கிராமத்தில் திமிங்கலம் இறந்த நிலையில் கரை ஒதுங்கி கிடந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள குமரப்பன்வயல் கிராமத்தில் கடற்கரை ஓரத்தில் ஒரு பெரிய திமிங்கலம் இறந்த நிலையில் கரை ஒதுங்கி கிடந்தது. இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள் கடலோர காவல் குழுமத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் கடலோர காவல் படை இன்ஸ்பெக்டர் முத்துக்கண்ணு, சப்-இன்ஸ்பெக்டர் ராமராஜன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறை அதிகாரி அன்புமணி சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார்.

கடற்கரையில் இறந்து கிடந்த திமிங்கலம் கோகியா வகையை சேர்ந்தது என கண்டறியப்பட்டது. பின்னர் அதனை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டார். 

அதனடிப்படையில் அங்கு வந்த கால்நடை மருத்துவர் பாலகிருஷ்ணன் இறந்த திமிங்கலத்தை பிரேத பரிசோதனை செய்தார். அப்போது திமிங்கலத்தின் வயிற்றில் இறந்தநிலையில் 6 மாத குட்டி ஒன்று இருந்தது, அதனை தனியாக எடுத்தனர். பின்னர் இறந்த திமிங்கலத்தை அங்கேயே அடக்கம் செய்தனர்.

வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட குட்டியை ஆராய்ச்சிக்காக தொண்டி வன உயிரியல் காப்பக அதிகாரி மதுபாலனிடம் ஒப்படைக்கப்பட்டது. இறந்த திமிங்கலம் 6 அடி நீளமும், 3 அடி அகலமும் சுமார் 200 கிலோ எடை கொண்டதாக இருந்தது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments