புதுக்கோட்டை மாவட்டத்தில் வருகிற ஜூலை.30 காணொளிக்காட்சி மூலம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!!



புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது.

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 30.07.2021 வெள்ளிக்கிழமை அன்று காலை 11.30 மணியளவில் காணொளிக்காட்சி மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் Zoom App/Google Meet-ல் நடைபெற உள்ளது. புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் காணொளிக்காட்சி வாயிலாக கலந்துக்கொள்ளும் வண்ணம் அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

எனவே, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் அந்தந்த வட்டாரங்களில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு காணொளிக்காட்சி மூலம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளிவிட்டு இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments