ATM கார்டை புதுப்பிக்கனும்.! வங்கியில் இருந்து மேலாளர் பேசுவதாக கட்டுமாவடியை சேர்ந்த பெண்ணின் வங்கி கணக்கில் ரூ.13,635 எடுத்து மோசடி! மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு!!



ஏ.டி.எம். கார்டின் ரகசிய எண்ணை பெற்று கட்டுமாவடி பெண்ணின் வங்கிக் கணக்கில் இருந்து நூதன முறையில் பணமோசடி செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியை சேர்ந்தவர் ராஜேஸ் கண்ணன். இவரது மனைவி கார்த்திகா (வயது 27). இவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் வங்கியில் இருந்து மேலாளர் பேசுவதாக கூறியுள்ளார். மேலும் கார்த்திகாவின் ஏ.டி.எம். கார்டை புதுப்பிக்க வேண்டும் எனவும், அந்த கார்டின் எண் மற்றும் ரகசிய குறியீடு எண் ஆகியவற்றை கேட்டுள்ளார்.

இதனை உண்மை என்று நம்பிய கார்த்திகா, ஏ.டி.எம்.கார்டின் எண் மற்றும் ரகசிய எண்ணை தெரிவித்துள்ளார். இதனை வைத்து அந்த மர்ம நபர் கார்த்திகாவின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.13 ஆயிரத்து 635-ஐ எடுத்தனர். தனது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டது குறித்து தகவல் அறிந்ததும் கார்த்திகா அதிர்ச்சியடைந்தார்.

நூதனமான முறையில் மோசடியில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் கார்த்திகா புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபா் குறித்து விசாரணை நடத்தியதோடு அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுபோன்ற 4-க்கும் மேற்பட்ட வழக்குகள் சைபர் கிரைம் போலீசில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் இதில் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. நூதனமுறையில் தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடும் நபர்களை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் தவிக்கின்றனர். வங்கியில் இருந்து பேசுவதாக கூறி யார் பேசினாலும் வங்கி கணக்கு எண், ஏ.டி.எம்.கார்டு எண், ரகசிய குறியீடு எண் ஆகிய விவரங்களை பொதுமக்கள் தெரிவிக்க வேண்டாம் என போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments