ஏ.டி.எம். கார்டின் ரகசிய எண்ணை பெற்று கட்டுமாவடி பெண்ணின் வங்கிக் கணக்கில் இருந்து நூதன முறையில் பணமோசடி செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியை சேர்ந்தவர் ராஜேஸ் கண்ணன். இவரது மனைவி கார்த்திகா (வயது 27). இவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் வங்கியில் இருந்து மேலாளர் பேசுவதாக கூறியுள்ளார். மேலும் கார்த்திகாவின் ஏ.டி.எம். கார்டை புதுப்பிக்க வேண்டும் எனவும், அந்த கார்டின் எண் மற்றும் ரகசிய குறியீடு எண் ஆகியவற்றை கேட்டுள்ளார்.
இதனை உண்மை என்று நம்பிய கார்த்திகா, ஏ.டி.எம்.கார்டின் எண் மற்றும் ரகசிய எண்ணை தெரிவித்துள்ளார். இதனை வைத்து அந்த மர்ம நபர் கார்த்திகாவின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.13 ஆயிரத்து 635-ஐ எடுத்தனர். தனது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டது குறித்து தகவல் அறிந்ததும் கார்த்திகா அதிர்ச்சியடைந்தார்.
நூதனமான முறையில் மோசடியில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் கார்த்திகா புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபா் குறித்து விசாரணை நடத்தியதோடு அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுபோன்ற 4-க்கும் மேற்பட்ட வழக்குகள் சைபர் கிரைம் போலீசில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் இதில் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. நூதனமுறையில் தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடும் நபர்களை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் தவிக்கின்றனர். வங்கியில் இருந்து பேசுவதாக கூறி யார் பேசினாலும் வங்கி கணக்கு எண், ஏ.டி.எம்.கார்டு எண், ரகசிய குறியீடு எண் ஆகிய விவரங்களை பொதுமக்கள் தெரிவிக்க வேண்டாம் என போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.