மதுரையிலிருந்து தொண்டி, மீமிசல் வழியாக கோட்டைப்பட்டிணம் வரை செல்லும் இரவு நேர பஸ் இயக்க மனு



இரவு நேர பஸ் இயக்க மனு அனுப்பப்பட்டு உள்ளது.
சிவகங்கை அரசு போக்குவரத்து பணிமனை மூலம் மதுரையில் இருந்து இரவு சுமார் 10.50 மணிக்கு அரசு பஸ் புறப்பட்டு சிவகங்கை, காளை யார்கோவில், சருகணி, திருவாடானை, தொண்டி, எஸ்.பி.பட்டினம், புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் வழியாக கோட்டைபட்டினம் வரை நீண்ட காலமாக சென்று கொண்டிருந்தது. 

இந்த பஸ் நிறுத்தப்பட்டதால் வியாபாரிகள், பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். 

எனவே தமிழக அரசும், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட நிர்வாகமும் நிறுத்தப்பட்டுள்ள இந்த பஸ் மீண்டும் இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் அரசுக்கு மனு அனுப்பி உள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments