கோவை மாவட்டம், ஒண்டிப்புதூர் சிவலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் மகாலட்சுமி. இவர், நேற்று கோயம்புத்தூரிலிருந்து பொன்னமராவதிக்கு வரும் அரசு பஸ்சில் திண்டுக்கல்லில் ஏரி கொட்டாம்பட்டியில் இறங்கியுள்ளார்.
மேலும் இவர் கையில் வைத்திருந்த பையில் 9½ பவுன் தங்க சங்கிலி, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, ரூ.2 ஆயிரம், டிரைவிங் லைசென்ஸ், வங்கி ஏ.டி.எம். கார்டு உள்ளிட்டவைகளை பஸ்சில் தவற விட்டுள்ளார். பஸ்சில் விட்டு இறங்கிய மகாலட்சுமி தன் கையிலிருந்த பையை தேடியபோது, பஸ்சில் தவற விட்டது தெரியவந்தது. உடனடியாக கொட்டாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்தநிலையில் பொன்னமராவதி வந்தடைந்த அரசு பஸ்சில் கிடந்த பையை டிரைவர் தவச்செல்வம், கண்டக்டர் மனோகரன் ஆகிய இருவரும் போக்குவரத்து பணிமனையில் உள்ள பொறுப்பு மேலாளர் கருப்பையாவிடம் ஒப்படைத்துள்ளளர். கருப்பையா உரிய விசாரணை செய்து பையை தவறவிட்ட மகாலட்சுமியை வரவழைத்து நகை-பணத்தை ஒப்படைத்தார். இந்த நேர்மையான செயலை கிளை மேலாளர், சக கண்டக்டர், டிரைவர்கள் வெகுவாக பாராட்டினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.