புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூரில் விலை கொடுத்துக் குடிநீர் வாங்குவதற்காகவே கூலி வேலைக்குச் செல்ல வேண்டியுள்ளதாகப் பெண்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பெருங்களூர் முதல் நிலை ஊராட்சியில் 17 குக்கிராமங்கள் உள்ளன. மானாவாரி விவசாயப் பகுதியாக உள்ள இந்த ஊராட்சியில் சுமார் 2,000 குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இங்கு, 2 குக்கிராமங்களைத் தவிர ஏனைய 15 கிராமங்களில் விநியோகிக்கப்படும் குடிநீரானது உப்பாக உள்ளது. இதனால், அந்த நீரைக் குடிப்பதற்கு அல்லாமல், மற்ற தேவைகளுக்கே பயன்படுத்தி வருகின்றனர். குடிப்பதற்கு தினமும் குடம் ரூ.10-க்கு 5 குடங்கள் வீதம் வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர். தினமும் குடிநீரை வாங்குவதற்காகவே காலிக் குடங்களோடு அதிகாலையிலேயே பெண்கள், சிறுவர்கள் வீட்டு வாசலில் காத்திருக்கின்றனர்.
இதுகுறித்துப் பெருங்களூரைச் சேர்ந்த பெண்கள் கூறும்போது, ''புதுக்கோட்டை- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் இந்த ஊர் இருந்தாலும், மக்களின் வாழ்வாதாரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு எந்த ஒரு தொழிற்சாலையும் இல்லை. மானாவாரியாக ஆண்டுக்கு ஒரு போகம் மட்டுமே சிறுதானியங்களைப் பயிரிட்டு வருகிறோம். மேலும், கூலி வேலைக்காகப் பக்கத்துக்கு ஊருக்குச் செல்கிறோம்.
வாகனங்கள் மூலம் குடிநீர் விநியோகிப்போரிடம் இருந்து தினமும் குடிநீர் வாங்குவதற்கே ஒவ்வொரு குடும்பத்தினரும் தலா ரூ.50-ல் இருந்து ரூ.100 வரை செலவிடுகின்றனர். கூலி வேலைக்குச் சென்றாலும் நாளொன்றுக்கு ரூ.100தான் கிடைக்கும். இந்தத் தொகையையும் குடிநீர் வாங்குவதற்கே பயன்படுத்த வேண்டியுள்ளது.
எனவே, உப்புத் தன்மை இல்லாத பகுதியில் ஆழ்துளைக் கிணறு அமைத்து அரசு, தரமான குடிநீர் விநியோகிக்க வேண்டும். அல்லது, ஆங்காங்கே குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்'' என்று தெரிவித்தனர்.
இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவர் சரண்யா ஜெய்சங்கர் கூறும்போது, ''ஒவ்வொரு குக்கிராமத்திலும் ஒரு ஆழ்துளைக் கிணறு வீதம் அமைத்து, குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், 2 குக்கிராமங்களைத் தவிர ஏனைய கிராமங்களில் தண்ணீரில் உப்புத் தன்மையின் அளவு அதிகமாக உள்ளதால் அதை யாரும் குடிப்பதற்குப் பயன்படுத்துவதில்லை. வேறு இடங்களில் ஆழ்துளைக் கிணறுகளை அமைத்துத் தரக் கோரி அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளோம்'' என்று தெரிவித்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.