கோட்டைப்பட்டினத்தில் சேதம் அடைந்த கட்டிடத்தில் செயல்பட்டு வரும் அரசு பெண்கள் பள்ளி: புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டி பொதுமக்கள் கோரிக்கை!!



கோட்டைப்பட்டினத்தில் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 350-க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த பள்ளி சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழைய கட்டிடத்தில் இயங்கி வருகிறது. தற்போது, இந்த கட்டிடம் சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. அதுமட்டுமின்றி இப்பள்ளியில் போதிய இட வசதி, கழிப்பறை வசதியும் இல்லை. இதனால் அந்த ஊரில் உள்ள சமூக ஆர்வலர்கள் தகர கொட்டகை அமைத்துக் கொடுத்துள்ளனர். அந்த தகர கொட்டகையில் இரண்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. 

இப்பள்ளி இயங்கும் கட்டிடத்தில் ஆலமரமும் முளைத்து வெடிப்பு உண்டாகியுள்ளது. இது குறித்து பலமுறை அரசுக்கு கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

இந்த பள்ளி கடந்த 7 வருடங்களாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இப்பள்ளி மாணவிகளின் நலன் கருதி போதிய கட்டிடம் கட்டி தரவேண்டும் என்று மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments