கோட்டைப்பட்டினத்தில் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 350-க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த பள்ளி சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழைய கட்டிடத்தில் இயங்கி வருகிறது. தற்போது, இந்த கட்டிடம் சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. அதுமட்டுமின்றி இப்பள்ளியில் போதிய இட வசதி, கழிப்பறை வசதியும் இல்லை. இதனால் அந்த ஊரில் உள்ள சமூக ஆர்வலர்கள் தகர கொட்டகை அமைத்துக் கொடுத்துள்ளனர். அந்த தகர கொட்டகையில் இரண்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இப்பள்ளி இயங்கும் கட்டிடத்தில் ஆலமரமும் முளைத்து வெடிப்பு உண்டாகியுள்ளது. இது குறித்து பலமுறை அரசுக்கு கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த பள்ளி கடந்த 7 வருடங்களாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இப்பள்ளி மாணவிகளின் நலன் கருதி போதிய கட்டிடம் கட்டி தரவேண்டும் என்று மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.