கறம்பக்குடியில் குளத்தில் குளிக்க சென்றபோது படியில் படர்ந்திருந்த பாசி வழுக்கியதால் தவறி கீழே விழுந்த டீக்கடை தொழிலாளி உயிரிழந்தார்.
கறம்பக்குடி அருகே உள்ள மழையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அகதீஸ்வரன் (வயது 40). இவர் கறம்பக்குடி சீனி கடைமுக்கம் பகுதியில் உள்ள டீக்கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று காலையில் அகதீஸ்வரன் அங்குள்ள கருப்பர்கோவில் குளத்தில் குளிக்க சென்றார். குளத்தின் படிக்கட்டில் இறங்கியபோது படியில் படர்ந்திருந்த பாசி வழுக்கியதால் தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதை கண்ட குளத்தில் குளித்து கொண்டிருந்தவர்கள் அவரை மீட்டு கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அகதீஸ்வரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்தெரிவித்தார். இதுகுறித்து கறம்பக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.