அறந்தாங்கியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சாலை மறியல் போராட்டம் வாபஸ்! சமாதான பேச்சுவார்த்தையில் உடன்பாடு!!
அறந்தாங்கியில் 14-வது வார்டு LN.புரம் - அவுலியா நகர் ஆகிவற்றை இணைக்கும் பிரதான சாலை அமைத்துதர வலியுறுத்தி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் அறிவிக்கப் பட்ட சாலை மறியல் பேச்சுவார்த்தை யில் உடன்பாடு ஏற்பட்டதால் கைவிடப்பட்டது.
அறந்தாங்கி 14-வது வார்டு LN.புரம் - அவுலியா நகர் ஆகிவற்றை இணைக்கும் பிரதான சாலை மற்றும் சன்னதிவயல் 7 ஆகிய பகுதியில் சாலை அமைத்துதர பொதுமக்கள் பல வருடங்களாக கோரி வருகிறார்கள். நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து அலட்சியம் செய்து வருகிறது. புதிய சாலை அமைத்து தராத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்களை திரட்டி, மனிதநேய ஜனநாயக கட்சி அறந்தாங்கி நகரம் சார்பில் 19-08-21 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு
அவுலியா நகர் பஸ்டாபில் சாலை மறியல் நடத்த இருக்கிறோம் என்ற துண்டுபிரசுர அறிவிப்பை தொடர்ந்து நேற்று 17-08-21 செவ்வாய் அன்று காலை 11 மணிக்கு அறந்தாங்கி வட்டாச்சியர் தலைமையில் நகராட்சி அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் முன்னிலையில் சமாதான பேச்சு நடைபெற்றது.
அதனடிப்படையில் மேற்குறிப்பிட்ட பகுதிகளில் குடிநீர் மற்றும் தெருவிளக்குகளை ஒரு மாதத்தில் அமைத்து தருவது எனவும் அனைத்து பகுதிகளிலும் மூன்று மாதத்தில் புதிய சாலைகள் அமைத்துதரப்படும் எனவும், தற்போது உடனடியாக பேட்ச் ஒர்க் எனப்படும் தற்காலிக பணிகள் செய்யப்படும் எனவும் தீர்மானகள் நிறைவேற்றப்பட்டன.
அதனடிப்படையில் 19-08-21 வியாழக்கிழமை அன்று அறந்தாங்கி அவுலியா நகர் பஸ்டாப்பில் மனிதநேய ஜனநாயக கட்சி அறந்தாங்கி நகரம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சாலை மறியல் கைவிடப்படுகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.