கோபாலப்பட்டினத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய மாபெரும் இரத்ததான முகாம்!(படங்கள்)





கோபாலப்பட்டினத்தில்  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது .

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோபாலப்பட்டினம் கிளை சார்பாக  இன்று(17/8/2021) செவ்வாய்க்கிழமை மாபெரும் இரத்ததான முகாம் கோபாலப்பட்டினத்தில்   நடைபெற்றது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோபாலப்பட்டினம் கிளை மற்றும் புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்திய இந்த இரத்ததான முகாமில் 46 யூனிட் இரத்தம், புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி இரத்தவங்கிக்கு  வழங்கப்பட்டது.

இந்த இரத்ததான முகாமிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் முபாரக் அலி தலைமை வகித்தார் இதில் கிளை தலைவர் அப்துல் ரசாக் மற்றும் கிளை நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த இரத்ததான முகாமில் கிளை செயலாளர் செய்யது இபுராஹிம் கிளை பொருளாளர் மகாதீர் முகமது துணை செயலாளர் முகமது முனாஸ் மருத்துவணி ரியாஸ் கான் தொண்டரணி முகம்மது ஹூசைன் மாணவரணி முகமது ஹசன் ஆகியோர் கலந்து கொண்டனர்...

அதிகமான பொதுமக்கள் இரத்ததானம் முகாமில் கலந்து கொண்டனர்...

என்றும் சமுதாயப்பணியில்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோபாலப்பட்டினம் கிளை
புதுக்கோட்டை மாவட்டம்
88702 21552













எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments