145 கிலோ புகையிலை பொருட்கள் கட்டுமாவடி மளிகை கடைகளில் பறிமுதல்!



145 கிலோ புகையிலை பொருட்கள் கட்டுமாவடி மளிகை கடைகளில் போலீசார் பறிமுதல் செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அடுத்த கட்டுமாவடி கடைவீதியில் உள்ள மளிகை கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக வந்த தகவலின் பேரில் புதுக்கோட்டை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் வீரபாண்டியன், செந்தில்குமார் கொண்ட தனிப்படையினர் கட்டுமாவடி கடைவீதியில் உள்ள மளிகை கடைகளில் திடீர் சோதனையிட்டனர். 

அப்போது முகமது ரியாஸ் என்பவரது மளிகைக்கடையில் 111 கிலோ புகையிலை பொருட்களும், ஷாஜஹான் மளிகைக்கடையில் 34 கிலோ புகையிலை பொருட்களும் என 145 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு மணமேல்குடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

இதுகுறித்து மணமேல்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments