கோபாலப்பட்டிணத்தில் நேற்று (ஆக்ஸடு 16)இரவு பெய்த மிதமான மழை






தமிழகத்தில்  சில நாட்களாக வெயிக்கொளுத்தி வருவதால் வெப்பச்சலனம் நிலவி மழை பெய்து வருகிறது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச் சலனம் காரணமாக 16, 17, 18 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தின் உள் மாவட்டங்கள், ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம்  ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானிபுரசக்குடி ஊராட்சி மீமிசல்  அருகே உள்ள  கோபாலப்பட்டிணத்தில் 
ஆகஸ்ட் 16 நேற்று இரவு 8.30மணியளவில் தீடிரென சாரல் மழை தொடங்கியது. அதை தொடந்து 9.00மணி அளவில் மிதமான மழை பெய்ய தொடங்கியது. அரை மணி நேரமாக பலத்த மழை பெய்தது . மழையின் காரணமாக சாலையோரங்களிலும்,  மழைநீர்  தேங்கி நின்றது. 

மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால்  பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.









எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments