ராமநாதபுரம் மாவட்டம், கன்னிராஜபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில், 1985- 86ஆம் ஆண்டில் படித்த மாணவ, மாணவியர் மீண்டும் அதே பள்ளியில் 35 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ராமநாதபுரம் மாவட்டம், கன்னிராஜபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில், 1985- 86ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்புப் படித்த மாணவரில் ஒருவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் இசிஜி ஆபரேட்டராக உள்ள வில்சன் புஷ்பராகம். அவர் தனது நண்பர்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டிச் சந்திக்க வைக்கலாமே என்று யோசித்தார். முன்னாள் மாணவர்கள் அனைவரின் செல்பேசி எண்களையும் தேடிக் கண்டறிந்து பள்ளிப் பருவ நண்பர்கள் மீண்டும் சந்திக்கும் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.
இந்த முன்னாள் மாணவர்களில் பலர் வணிகர்களாகவும், ஆசிரியர்களாகவும் உள்ளனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் பணிபுரியும் சாம்நியூபிகின் தனது நண்பர்களை உற்சாகப்படுத்த இரு தங்கக் காசுகள், இரு வெள்ளிக் காசுகளைப் பரிசாக வழங்கினார். இந்தக் காசுகள் குலுக்கல் முறையில் 4 பேருக்கு வழங்கப்பட்டன. தங்கக் காசுகள் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு, பார்வதிக்கும், வெள்ளிக் காசுகள் சக்திவேல், தமிழரசிக்கும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தர்மராஜ், கார்மேகம், ஜெர்மினியான்ஸ், தாமஸ் ஆகியோர் செய்திருந்தனர். தமிழகத்தின் பல ஊர்களில் இருந்து வந்தவர்கள், 35 ஆண்டுகளுக்குப் பின்னர் தங்கள் பள்ளிப் பருவ நண்பர்களை உணர்ச்சிப் பெருக்கோடு சந்தித்துப் பேசி மகிழ்ந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.