கோபாலப்பட்டிணத்தில் உடற்பயிற்சி மையம் வேண்டி பொதுநல சேவை சங்கம் சார்பில் விளையாட்டுத் துறை அமைச்சரிடம் மனு!
கோபாலப்பட்டிணம் பொதுநல சேவை சங்கம் சார்பில் சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் வி. மெய்யநாதன் அவர்களிடம் உடற்பயிற்சி நிலையம் அமைக்க வேண்டி மனு அளித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணத்தில் உடற்பயிற்சி நிலையம் மற்றும் உடற்பயிற்சி உபகரணங்கள் வழங்க வேண்டி சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் வி. மெய்யநாதன் அவர்களை தலைமை செயலகத்தில் சந்தித்து பொதுநல சேவை சங்கத்தின் உறுப்பினர் அப்துல் ஹமீது மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது,
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தொகுதி, ஆவுடையார் கோவில் தாலுக்கா. கோபாலப்பட்டினம் பகுதியில் சுமார் 500 இளைஞர்கள் உள்ளனர். எங்களுக்கு உடற்பயிற்சி செய்ய உடற்பயிற்சி நிலையம் அமைத்து உடற்பயிற்சி உபகரணங்கள் வைத்துக்கொடுக்குமாறுத் தங்களை எங்கள் பகுதிவாழ் இளைஞர்கள் சார்பாக அன்புடன் பொதுநல சேவை சங்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.