புதுக்கோட்டை மாவட்டத்தில் வருகிற 31-ந் தேதி காணொலி காட்சி மூலம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!



புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 31-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11.30 மணிக்கு காணொலிக்காட்சி மூலம் நடைபெற உள்ளது.

கூட்டத்திற்கு கலெக்டர் கவிதா ராமு தலைமை தாங்குகிறார். இக்கூட்டத்தில் காணொலிக்காட்சி வாயிலாக கலந்துக்கொள்ளும் வண்ணம் அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களிலும் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

எனவே, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் அந்தந்த வட்டாரங்களில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு காணொலிக்காட்சி மூலம் கலந்து கொள்ளலாம். 

முககவசம் அணிந்து, சமூக இடைவெளிவிட்டு இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயன்பெறுமாறு கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments