75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு..SDPI கட்சியின் சார்பாக கோபாலபட்டினம் நுழைவு வாயில், பாரத ஸ்டேட் வங்கி அருகில் மற்றும் மீமிசல் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இந்திய தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி காலை சரியாக 10:00 மணிக்கு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
எஸ்டிபிஐ கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் சார்பாக கொண்டாடப்பட்ட சுதந்திர தின கொடியேற்ற நிகழ்வில்,
மீமிசல் பேருந்து நிலையத்தில் மீமிசல் நகர தலைவர் அரசை முகமது இப்ராஹிம் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்கள். மீமிசல் நகர செயலாளர் சேக் அப்துல்லா அவர்கள் முன்னிலை வகித்தார்கள். கொடியேற்ற நிகழ்ச்சிக்குப் பிறகு அங்கு வந்திருந்த அனைவரும் சுதந்திர தின உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
இதேபோல் பாரத ஸ்டேட் வங்கி அருகில் மீமிசல் நகர பிரதிநிதி OSJS யாசின்அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்கள்.
கோபாலப்பட்டினம் நுழைவு வாயில் அருகில் கோபாலபட்டினம் கிளை செயலாளர் ஷேக் பரீத் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்கள்.
இந்நிகழ்வில் அஹமது தம்பி, ரபீக் உள்ளிட்ட கோபாலபட்டினம், அரசநகரிப்பட்டினம் கிளை, மீமிசல் நகர நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
SDPI கட்சி
மீமிசல் நகரம்
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.