தமிழகத்தில் கோவை, சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துவருவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலாளர் லவ் அகர்வால், தேசிய தொற்று நோய் தடுப்புப் பிரிவு இயக்குநர் எஸ்.கே.சிங் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது, கொரோனா பரவல் குறைந்தபோதிலும், நாடு முழுவதும் 37 மாவட்டங்களில் கொரோனா பரவல் நாள்தோறும் அதிகரித்து வருவதாக அவர்கள் குறிப்பிட்டனர். தமிழகத்தில் கோவை, சென்னை, ஈரோடு, செங்கல்பட்டு, திருவள்ளூர், புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய 7 மாவட்டங்களில் பரவல் அதிகரித்துவருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்த மாவட்டங்கள் கவலை அளிக்கக் கூடியவை என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, டெல்டா பிளஸ் ஆகிய உருமாற்றம் பெற்ற வகைகள் கவலை அளிப்பதாகவும், மேலும் இரண்டு வகைகள் குறித்து ஆய்வுசெய்து வருவதாகவும் எஸ்.கே.சிங் கூறினார். ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏற்பட்டதா என்பது குறித்து மாநிலங்களிடம் கருத்து கேட்டிருந்ததாகவும், ஒரு மாநிலம் மட்டுமே சந்தேகத்துக்குரிய மரணம் இருப்பதாக தெரிவித்துள்ளதாகவும் லவ் அகர்வால் தெரிவித்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.