அம்மாபட்டினத்தில் லாட்டரி, கஞ்சா விற்பனையை தடுக்கக்கோரி AIMIM கட்சி சார்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி வட்டம் அம்மாபட்டினத்தில் தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனை மற்றும் கஞ்சா விற்பனையைத் தடுக்க வேண்டும் என மஸ்லிஜ் கட்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளது.
இதுதொடா்பாக அக்கட்சியின் (ஏஐஎம்ஐஎம்) மாநில மகளிரணிச் செயலா் பாத்திமா மஸ்ரினா தலைமையிலான அக்கட்சியினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த கோரிக்கை மனு விவரம்
அம்மாபட்டினத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயா்த்தி 24 மணி நேரமும் செயல்படும் அரசு மருத்துவமனையாக செயல்பட வைக்க வேண்டும்.
இப்பகுதியில் பெண்கள் மட்டுமே குளிக்கும் மரவன்குளத்தைச் சுற்றி நடைப்பயிற்சி மேடை அமைத்துத் தர வேண்டும். அம்மாபட்டினத்தில் சிறுவா் பூங்கா அமைக்க வேண்டும்.
எங்கள் பகுதியில் சரளமாகப் புழங்கும் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையையும், கஞ்சா விற்பனையையும் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்நிகழ்வில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் மவ்லவி A.R சுல்தான் தேவ்பந்தி, லஞ்ச ஒழிப்பு பறக்கும் படை செயலாளர் சையத் இப்ராஹிம் மற்றும் அம்மாபட்டினம் சகோதரிகள் உடன் இருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.