GPM மீடியா செய்தி எதிரொலி: வெளிச்சம் பெற்ற கோபாலப்பட்டிணம் காட்டுக்குளம் - மீமிசல் சாலை.! நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!!



GPM மீடியா செய்தி எதிரொலியாக கோபாலப்பட்டிணம் காட்டுக்குளம் -மீமிசல் சாலை வெளிச்சம் பெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் காட்டுக்குளம் பகுதி மக்கள் மீமிசல் செல்வதற்கு காட்டுகுளத்தில் இருந்து மீமிசல் காவல் நிலையம் வரை உள்ள சாலையை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் காட்டுகுளம் பகுதி மக்கள் மீமிசல் சென்று வருவதற்கு முக்கிய சாலையாக திகழ்ந்து வருகிறது.இந்த சாலையில் உள்ள தெருவிளக்கு கடந்த ஒரு மாதத்திற்கு மேல் எரியாமல் இந்த தெருவே இருளில் மூழ்கி இருந்தது. மேலும் இது சம்மந்தமாக GPM மீடியாவில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

அதனடிப்படையில் நேற்று ஆகஸ்ட் 4 புதன்கிழமை வட்டார வளர்ச்சி அதிகாரியின் (BDO) நடவடிக்கையால் அந்த பகுதியில் உள்ள அனைத்து மின் விளக்குகளும் சரிசெய்யப்பட்டது. மேலும் தெருவிளக்கு எரிய நடவடிக்கை எடுத்த அதிகாரிக்கும் மற்றும் செய்தி வெளியிட்ட GPM மீடியாவிற்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.







எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments