திருவாரூரில் இருந்து அறந்தாங்கி வழியாக காரைக்குடிக்கு அகலபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் நிறைவு பெற்றும் ரெயில் சேவை இல்லாமல் கிடப்பில் கிடந்தது.
இந்நிலையில் நேற்று முதல் இந்த வழித்தடத்தில் ரெயில் இயக்கப்பட்டது. திருவாரூரில் இருந்து புறப்பட்டு வந்த இந்த ரெயில் அறந்தாங்கி ரெயில் நிலையத்திற்கு மதியம் 1.04 மணிக்கு வந்து 1.05 புறப்பட்டு சென்றது.
இந்த ரெயிலுக்கு அப்பகுதி மக்கள் வரவேற்பு அளித்தனர். பின்னர் காரைக்குடியில் இருந்து மாலை 3.29 மணிக்கு அறந்தாங்கி வந்தது. பின்னர் 3.30 மணிக்கு புறப்பட்டு சென்றது.
ஏற்கனவே இந்த ரெயில் நின்று சென்ற மாங்குடி, மாவூர்ரோடு, அம்மனுர், ஆலத்தம்பாடி, மணலி, முத்துப்பேட்டை, ஒட்டங்காடு, வாளரமாணிக்கம், கண்டனூர், புதுவயல் ஆகிய இடங்களில் ரெயில் நிறுத்தம் நீக்கப்பட்டு உள்ளது. தற்போது ரெயில் சேவை தொடங்கி உள்ள நிலையில் பொதுமக்கள் வர்த்தகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.