விராலிமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருடியவரை கைது செய்த புதுக்கோட்டை மாவட்ட விராலிமலை காவல்துறையினர்
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா இ.மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி மகன் சுப்பிரமணியன் இவர் திருச்சியில் உள்ள தொழிலாளர் துறை அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 04.08.2021-ந்தேதி சுப்பிரமணி வேலைக்கு சென்றுவிட்டார். அவரது குடும்பத்தினரும் அன்று சமயபுரம் கோவிலுக்கு சென்று விட்டு, மதியம் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது வீட்டின் முன்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சுப்பிரமணியன் குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.17 ஆயிரம் மற்றும் மடிக்கணினியை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின் பேரில், விராலிமலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.திருவேங்கடம் அவர்கள் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டதில் திருடிய குற்றவாளியை கண்டுபிடித்து 09.08.2021 ஆம் தேதி அன்று திண்டுக்கல் மாவட்டம், சவேரியார் பாளையத்திற்கு சென்று விராலிமலை காவல்துறையினர் குற்றவாளியை கைது செய்தனர்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்கு புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.