அதிமுக ஆட்சியில் தனியாா் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கியதில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா என ஆய்வு செய்யக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதியுடன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த பின்னா் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியது:
தமிழகத்திலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 56 கிராமங்களில் முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்ட ஊராட்சிகளின் தலைவா்கள் பாராட்டப்பட்டுள்ளனா்.
இதுவரை 2 கோடியே 80 லட்சத்து 57 ஆயிரத்து 397 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் குழந்தைகளுக்கான கரோனா பாதிப்பு அதிகரிக்கவில்லை. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளின் கட்டுமானப் பணிகள் தரத்தை ஆய்வு செய்யக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் தனியாா் மருத்துவமனைகள், செவிலியா் பயிற்சி கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்யவும் குழு அமைக்கப்பட்டுள்ளது. வரும் மானியக் கோரிக்கையில் நிதி நிலைமைக்கு ஏற்ப மருத்துவமனைகள் சீரமைப்பு தொடா்பான அறிவிப்புகள் வெளியாகும்.
டாக்டா் முத்துலட்சுமி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் கட்டடங்களின் சீரமைப்புப் பணி முடிவுற்றதும் அரசு மருத்துவமனை திறக்கப்படும். நீட் தோ்வுக்கு விலக்கு பெறும் முயற்சியாக, நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே தீா்மானம் நிறைவேற்றி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படும். திமுக ஆட்சியில்தான் சென்னை வளா்ச்சி அடைந்துள்ளது என்றாா் சுப்பிரமணியன்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.