அறந்தாங்கி அருகே மின்சாரம் பாய்ந்து பெண் பலி மரணம்





 அறந்தாங்கி அருகே மின்சாரம் பாய்ந்து பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

அறந்தாங்கி அருகே மறமடக்கி வத்திரான் குடியிருப்பை சேர்ந்தவர் மதியழகன். இவரது மனைவி தமிழ்செல்வி (வயது 50). இவர் வீட்டில் வளர்க்கும் கால்நடைகளுக்கு அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் புல் அறுக்க நேற்று சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் மதியழகன் அவரை தேடி சென்றபோது, வயலில் அறுந்து கிடந்த மின்சார கம்பியின் மூலம் மின்சாரம் பாய்ந்து தமிழ்செல்வி இறந்து கிடந்தார். 

இதையறிந்த அறந்தாங்கி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தமிழ்செல்வி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments