திருவாரூர்-காரைக்குடி இடையே டெமு ரெயில் (ஞாயிற்றுக்கிழமை தவிர) மீண்டும் இன்று (புதன்கிழமை) முதல் இயக்கப்பட உள்ளது.
எக்ஸ்பிரஸ் கட்டணத்துடன் இயக்கப்படும் இந்த ரெயில் திருவாரூரில் இருந்து புறப்பட்டு அறந்தாங்கி ரெயில் நிலையத்திற்கு மதியம் 1.04 மணிக்கு வந்து 1.05 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
காரைக்குடியில் இருந்து வரும் போது மாலை 3.29 மணிக்கு வந்து 3.30 மணிக்கு புறப்படும்.
இன்று முதல் இயங்கும் 06197/98 திருவாரூர்⇋காரைக்குடி வழி அறந்தாங்கி DEMU(Unreserved) விரைவு ரயில், கீழ் கண்ட ரயில் நிலையங்களில் நிற்காது
1. மாங்குடி 2. மாவூர் ரோடு 3. அம்மனூர், 4. ஆலத்தம்பாடி 5. மணலி 6. முத்துப்பேட்டை, 7. ஒட்டங்காடு, 8. வாள ரமணிக்கம், 9. கண்டனூர் புதுவயல் உள்ளிட்ட 9 ரயில் நிலையங்களுக்கான நிறுத்தம் நீக்கப்பட்டுள்ளது.
முன்பு மேற்கண்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த ரயில் திருவாரூர், திருநெல்லிக்காவல், திருத்துறைப்பூண்டி, தில்லைவிளக்கம், அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஆயிங்குடி, அறந்தாங்கி, பெரியகோட்டை, காரைக்குடி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.