தமிழகத்தில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பதோடு, புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று பரவல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் தொற்றின் எண்ணிக்கை சற்று அதிகரித்து காணப்படுகிறது. 9-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஆனால் புதிய தளர்வுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. சென்னையில் மக்கள் கூடும் சில பகுதிகளில் திடீர் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன.
ஊரடங்கு காலம் முடிவடைய உள்ள நிலையில், அதை மேலும் நீட்டிப்பதற்கான ஆலோசனைக் கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நடத்துகிறார். அவர் தலைமையில் பிற்பகல் 12.30 மணியளவில் நடக்க இருக்கும் இந்தக் கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறதா? அதற்கு ஏற்ற வகையில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டுமா? என்பது பற்றி இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் புதிய கட்டுப்பாடுகள் பற்றிய அறிவிப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அல்லது நாளை வெளியிடுவார் என்று தெரிகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.