நகைக்கடைகளில் விற்பனை செய்யப்படும் அனைத்து தங்க நகைகளும் 6 இலக்கம் கொண்ட தனி ஹால்மார்க் அடையாள எண்ணை(எச்.யு.ஐ.டி.) பதிவு செய்ய வேண்டும் என இந்திய தர நிர்ணய ஆணையம்(பி.ஐ.எஸ்.) அறிவித்திருக்கிறது.
இந்த தனி அடையாள எண் மூலம் தங்கநகை எங்கு உருவாக்கப்படுகிறது?, யார் மூலம் விற்பனை செய்யப்படுகிறது?, யார் வாங்குகிறார்கள்? என்பதை அறிந்து கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தமிழகம் முழுவதும் உள்ள 35 ஆயிரம் தங்க நகைக்கடைகள் இன்று(நேற்று) 2½ மணி நேரம் அடைக்கப்பட்டிருக்கும் என்று நகைக்கடை உரிமையாளர்கள் அறிவித்து இருந்தனர்.
அதன்படி புதுக்கோட்டையில் நேற்று காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை 3 மணிநேரம் நகைக்கடைகளை அடைத்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 1,500 சிறிய மற்றும் பெரிய நகைக்கடைகள் அனைத்தும் மதியம் 12 மணி வரை மூடப்பட்டிருந்தன.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.