புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் மாவட்ட தலைவர் செய்யது அகமது அவர்கள் தலைமையில் கட்டுமாவடியில் 23.08.2021 அன்று நடைபெற்றது.
தேர்தல் நடத்தும் அதிகாரியாக மாநில செயலாளர் அபுபக்கர் சித்திக் மற்றும் புதுக்கோட்டை (மேற்கு) மாவட்ட தலைவர் சலாவுதீன் ஆகியோர் கலந்து கொண்டு தேர்தலை நடத்தினர்.
கட்சியின் மாவட்ட செயலாளர் ஆவுடை சதாம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த, மாவட்ட தலைவர் செய்யது அகமது அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார்கள். இப்பொதுக்குழுவில் 2018-2021 ஆண்டுக்கான செயற்பாட்டறிக்கை மாவட்ட பொதுச்செயலாளர் டாக்டர் ஹனிபா அவர்களால் தாக்கல் செய்யப்பட்டு மாவட்ட பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டது.
ஜனநாயக முறைப்படி தேர்தல் அடிப்படையில் அடுத்த மூன்றாண்டுக்கான நிர்வாக கமிட்டி அமைக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட புதிய மாவட்ட தலைவராக செய்யது அகமது, மாவட்ட துணைத் தலைவராக P.M.S.குலாம், பொதுச் செயலாளராக S.A.M.அரபாத், மாவட்ட செயலாளர்களாக M.M.டாக்டர் ஹனிபா, முஹமது சாலிஹ், பொருளாளராக அரசை முகம்மது இக்பால், மாவட்ட செயற்குழு உறுப்பினராக ஆவுடை சதாம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இறுதியாக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட S.A.M.அரபாத் அவர்கள் நன்றி உரை நிகழ்த்தினார்கள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.