SDPI கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட பொதுக்குழுவில் 2021-2024 ஆண்டுக்கான புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!



புதுக்கோட்டை கிழக்கு  மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் மாவட்ட தலைவர் செய்யது அகமது அவர்கள் தலைமையில்  கட்டுமாவடியில் 23.08.2021 அன்று  நடைபெற்றது.

தேர்தல் நடத்தும் அதிகாரியாக மாநில செயலாளர் அபுபக்கர் சித்திக் மற்றும் புதுக்கோட்டை (மேற்கு) மாவட்ட தலைவர் சலாவுதீன் ஆகியோர் கலந்து கொண்டு தேர்தலை நடத்தினர்.

கட்சியின் மாவட்ட செயலாளர் ஆவுடை சதாம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த, மாவட்ட தலைவர் செய்யது அகமது அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார்கள். இப்பொதுக்குழுவில் 2018-2021 ஆண்டுக்கான செயற்பாட்டறிக்கை மாவட்ட பொதுச்செயலாளர் டாக்டர் ஹனிபா அவர்களால் தாக்கல் செய்யப்பட்டு மாவட்ட பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டது. 
    
ஜனநாயக முறைப்படி தேர்தல் அடிப்படையில் அடுத்த மூன்றாண்டுக்கான நிர்வாக கமிட்டி அமைக்கப்பட்டது.
  
அதன் அடிப்படையில், புதுக்கோட்டை கிழக்கு  மாவட்ட புதிய மாவட்ட தலைவராக செய்யது அகமது, மாவட்ட துணைத் தலைவராக P.M.S.குலாம், பொதுச் செயலாளராக S.A.M.அரபாத், மாவட்ட செயலாளர்களாக M.M.டாக்டர் ஹனிபா, முஹமது சாலிஹ், பொருளாளராக அரசை முகம்மது இக்பால், மாவட்ட செயற்குழு உறுப்பினராக ஆவுடை சதாம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
     
இறுதியாக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட S.A.M.அரபாத் அவர்கள் நன்றி உரை நிகழ்த்தினார்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments