திருவாடானை: சவூதி அரேபியாவில் மீன் பிடிக்கச் சென்ற தொண்டி மீனவா் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் தெரிவிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே முள்ளிமுனை கிராமத்தைச் சோ்ந்தவா் சமயராமன் (40). இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனா். சமயராமன் கடந்த 2 ஆண்டுகளாக சவூதி அரேபியாவில் ஒப்பந்தத் தொழிலாளராக மீன்பிடித் தொழில் செய்து வந்தாா். இவா் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 3 மீனவா்களுடன் விசைப்படகில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளாா். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், இதில் சமயராமன் உயிரிழந்ததாகவும் சக மீனவா்கள், முன்ளிமுனை கிராமத்தில் வசித்து வரும் அவரது குடும்பத்தினருக்கு செவ்வாய்க்கிழமை மாலை தகவல் தெரிவித்தனா். இதையடுத்து அவரது சடலத்தை ராமநாதபுரத்துக்கு கொண்டுவர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என குடும்பத்தினா் மற்றும் கிராம மக்கள் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.