தொடக்க காலத்தில் கொரோனா தடுப்பூசி தொடர்பாக தவறான தகவல் பரப்பப்பட்டது. அதனால் தான் மக்கள் அச்சப்பட்டனர். தற்போது அந்த நிலைமை மாறி உள்ளதால் பொதுமக்கள் ஆர்வத்தோடு தடுப்பு ஊசி செலுத்தி கொள்கின்றனர் என மாநிலங்களவை உறுப்பினர் எம் எம் அப்துல்லா தெரிவித்துள்ளார்
புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது வரை ,8 லட்சத்து ஆயிரத்து 348 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது
44 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப் பட்டிருந்தது. ஆனால் இலக்கை தாண்டி நேற்று ஒரு நாள் மட்டும் 66,766 பேருக்கு ;தடுப்பு ஊசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை நகராட்சி சிறப்பாக செயல்பட்ட நகராட்சி அதிகாரிகளுக்கு மாநிலங்களவை உறுப்பினர் எம்எம் அப்துல்லா நகராட்சி அலுவலகத்திற்கு நேரில் வந்து நகராட்சி அதிகாரிகளை பாராட்டினார். அப்போது பேசிய மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா, கொரோனா தடுப்பு ஊசி வந்தவுடன் தடுப்பூசி குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டதால் பொதுமக்கள் அச்சப்பட்டனர். இதனால் தடுப்பூசி பணி வெகுவாக பாதிக்கப்பட்டது. தற்போது தடுப்பூசி பயம் பொதுமக்களிடையே போய்விட்டது. ஆர்வத்துடன் பொதுமக்கள் தடுப்பூசியை தற்போது செலுத்திக் கொண்டு வருகின்றனர். நேற்று நடந்த தடுப்பூசி முகாம் முகாமில் இலக்கை தாண்டி மாவட்டத்தில் அதிகாரிகள் மற்றும் அனைத்து துறை ஒத்துழைப்போடு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது என்றார்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.