பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் ஏற்படுவது மிகப்பெரிய சமூகப் பிரச்சனையாக தொடர்ந்து கொண்டே வருகிறது. மாணவிகளுக்கு மட்டுமல்ல சிறிய வகுப்பு மாணவர்களும் இது போன்ற தாக்குதல்களுக்கு ஆளாவதாக புகார்கள் வருகின்றன.இந்த சம்பங்கள் இன்றோ, நேற்றோ அல்ல. பல ஆண்டுகளாக இந்தச் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. தற்போது புதுக்கோட்டை மாவட்டம் மேட்டுப்பட்டி செல்லும் சாலையில், மருப்பினியில் தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி உள்ளது.
இந்த பள்ளியில் படிக்கும் பிளஸ்-1 மாணவிக்கு, அந்த வகுப்பின் ஆசிரியர் சண்முகநாதன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக அந்த மாணவியின் பெற்றோர், பள்ளி முதல்வரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து ஆசிரியர் சண்முகநாதனை பணி நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக புதுக்கோட்டை கல்வி மாவட்ட அதிகாரி ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தி, முதன்மை கல்வி அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர்.
இது தொடர்பாக கல்விஅதிகாரி ராஜேந்திரனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
பிளஸ்-1 மாணவியிடம் ஆன்-லைன், வாட்ஸ்-அப் மூலம் பாடம் நடத்தும் போது செல்போனில் இரட்டை அர்த்தத்தில் ஆசிரியர் சண்முகநாதன் பேசியுள்ளார். அவர் பணிக்கு சேர்ந்து சில மாதங்கள் தான் ஆனதாம். புகாரின் அடிப்படையில் உடனடியாக அவரை பணி நீக்கம் செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி தரப்பில் இருந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பார்கள். கல்வித்துறை தரப்பில் விசாரணை முடிந்தது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில் புதுக்கோட்டை டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் ஆசிரியர் சண்முகநாதன் மீது போக்சோ சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் நேற்று இரவு அவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.