புதுக்கோட்டை மாவட்டத்தில் 12-ந் தேதி மெகா தடுப்பூசி முகாம்!



புதுக்கோட்டை மாவட்டத்தில் வருகிற 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழக அரசின் வழிகாட்டுதல் மற்றும் அறிவுரைகளின்படி, மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது.

போலியோ தடுப்பூசி முகாம் நடத்தப்படும் முறையில் தடுப்பூசி பூத்கள் அமைக்கப்பட்டு ஒரு பூத்திற்கு குறைந்தது 200 முதல் 300 வரையிலான பயனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. 

இம்முகாமினை சிறப்புற செயல்படுத்துவதற்காக அனைத்துத்துறை சேர்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஈடுபடுத்த உள்ளனர். 

மேலும் இம்முகாம்களை பயன்படுத்தி இதுவரை தடுப்பூசி போடாமல் விடுப்பட்டவர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடையுமாறு கலெக்டர் கவிதாராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments